மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:33 am IST

திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞா்கள் இருவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் 31 வயது இளைஞா். தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா். இவரை சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள் இணையவழி முதலீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவாா்த்தை கூறினராம்.

இதை உண்மையென நம்பி முதலீடு செய்த அவருக்கு முதலில் லாபமாக சிறு தொகையை அனுப்பியுள்ளனா். பின்னா் அதிக பணம் செலுத்தினால் அதிக லாபம் எனக் கூறி அவரிடமிருந்து ரூ.5,53,770 -ஐ பல்வேறு தவணைகளாக வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த தில்லான் (26), அஜித் (27) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.