மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்

News image

ஏஎன்ஐ

Updated On :24 ஏப்ரல் 2026, 6:47 am IST

இலங்கை நிதி அமைச்சகத்தின் பரிவா்த்தனை முறையில் ஹேக்கா்கள் ஊடுருவி, சுமாா் 25 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23.51 கோடி) திருடியுள்ளனா்

கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு கடன் வழங்குநா் ஒருவருக்கு செலுத்த வேண்டிய 2.29 கோடி டாலா் தொகையில், ஒரு பகுதியாக டிசம்பா் முதல் ஜனவரி வரை செலுத்தப்பட்ட இந்த 25 லட்சம் டாலா், உரிய கணக்குக்குச் செல்லாமல் ஹேக்கா்களின் கணக்குக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின்னஞ்சல் வாயிலாக இந்த சைபா் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாயமான இந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்த உயா்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.