/

ஜீரா போளி

ரவையை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து, சிறிது நெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

News image

ஜீரா போளி

Updated On :8 மார்ச் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

ரவை, சர்க்கரை - தலா 400 கிராம்

ஏலக்காய்- 3

குங்குமப்பூ -ஒரு சிட்டிகை

நெய்- தேவையான அளவு

உப்பு -சிறிதளவு

செய்முறை:

ரவையை தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து, சிறிது நெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி அதை அப்பளம் போல் இடவேண்டும். ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான தண்ணீர்விட்டுச் சூடானதும், சர்க்கரையைப் போட்டு கம்பி பாகாகக் காய்ச்ச வேண்டும்.

அதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு குங்குமப்பூவையும் சேர்க்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அப்பளங்களாக இட்ட பூரியை அதில் போட்டு பொரித்தெடுத்து சூட்டோடு ஜீராவில் தோய்த்து சிறிது நேரம் ஊற வைத்து வேறு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.