விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக் பக்ரி

'வாக்' என்பதற்கு குஜராத்தி மொழியில் 'புலி' என்றும், 'பக்ரி' என்பதற்கு 'ஆடு' என்றும் பொருள்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:01 am IST

முனைவர் குமார்

'வாக்' என்பதற்கு குஜராத்தி மொழியில் 'புலி' என்றும், 'பக்ரி' என்பதற்கு 'ஆடு' என்றும் பொருள். 'வாக் பக்ரி' நிறுவனத்தின் விளம்பரச் சின்னத்தில் ஒரு புலியும் ஆடும் தேநீர்க் கோப்பையில் வாய் வைப்பது போலக் காட்சி உள்ளது. சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வணிக விற்பனையைத் தாண்டி 'வாக் பக்ரி' இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

நரந்தாஸ் தேசாய் என்பவர் 1892-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 500 ஏக்கரில் டீ எஸ்டேட்டை முதலில் நிறுவினார். வியாபாரம் தழைப்பதாகத் தோன்றினாலும், அங்கு நிலவிய நிறவெறியால் இந்தியர்களுக்கு வணிகம் செய்வது ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது. பல ஆண்டுகள் போராடியும் வியாபாரத்தில் தொய்வே ஏற்பட்டது. எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பினார்.

அந்த நாள்களில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வியாபாரத்தைத் தொடங்க பெரிய மனிதர்களின் பரிந்துரைக் கடிதம் அவசியம். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் பெரிதாக மதித்தது சுதந்திர இந்தியாவுக்காகப் பாடுபட்ட காந்தியடிகள் போன்றவர்களைத்தான்.

காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலும் இருந்தவர். தேசாய் அத்தகைய கடிதத்தை அவர் உயர்வாய் மதித்து வந்த காந்தியடிகளிடம் பெற்றார். பின்னர், தேசாய் தனது அலுவலை அகமதாபாத்தில் 1915-இல் தொடங்கினார். இவர் மனிதர்களிடையே பிரிவினை இருக்கக் கூடாது என உறுதியாக நம்பியதோடு, வணிகமும் கொள்கைப் பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியவர்.

சமத்துவத்தை விற்பனை விளம்பரத்தில் காட்டுவது எப்படி? அனைவரையும் ஒன்றாக ஈர்த்து தேநீரைப் பருக வைப்பது எப்படி? தேநீர் கம்பெனியின் பெயரும் விற்பனைச் சின்னமும் எப்படியிருக்க வேண்டும்? என்றெல்லாம் நன்கு ஆராய்ந்தே நரந்தாஸ் தேசாய் தனது தேநீர் கம்பெனிக்கு ' வாக் பக்ரி' என்ற பெயரை வைத்தார். விளம்பரச் சின்னமும் அதற்கு தகுந்தபடி பொறிக்கப்பட்டது. இன்றும் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

'விற்பனைத் துறையின் குரு' என்று அழைக்கப்படும் பிலிப்ஸ் கோட்லர் என்பவர் 'மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்' என்கிற விற்பனை மேலாண்மையில் நூலை எழுதியவர். விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு அகராதியைப் போன்ற இந்த நூலில், 'வாக் பக்ரி' நிறுவனம் குறித்து மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.