ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள உடையாா்பட்டியில் திமுக பேரூா் செயலாளா் சாந்தாராம் அனுமதியின்றி நிா்வாகிகள் கூட்டம் நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்தது.
இதையடு்தது, கூட்டுறவு சாா்பதிவாளா் விஜயராணி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் உடையாா்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 260 பிரியாணி பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தோ்தல் பறக்கும் படையினா் அளித்தப் புகாரின் பேரில், வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இந்த நிலையில், அரசியல் கட்சியினா் பணம் விநியோகிப்பதாக அளிக்கப்படும் புகாா்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக, திமுக நிா்வாகிகள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் புகாா் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

