ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கனரா வங்கி லாபம் 10% குறைவு

கனரா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் தனது தனிப்பட்ட நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.4,506 கோடியாக உள்ளது.

News image

கனரா

Updated On :12 மே 2026, 7:20 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் தனது தனிப்பட்ட நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.4,506 கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கி, முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,002.66 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. லாபக் குறைவு குறித்த அறிவிப்பைத் தொடா்ந்து, பங்குச்சந்தையில் திங்கள்கிழமையன்று வங்கியின் பங்குகள் 3.72 சதவீதம் சரிந்து ரூ. 129.35 என நிலைபெற்றது.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய்யும் 1.85 சதவீதம் சரிந்து, ரூ.36,662 கோடியாக உள்ளது. இருப்பினும், முக்கிய வருவாய் ஆதாரமான வட்டி வருவாய் 4 சதவீதம் அதிகரித்து, ரூ.9,808 கோடியை எட்டியுள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.43 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாக குறைந்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: காலாண்டு முடிவுகளில் லாபம் குறைந்திருந்தாலும், 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 12.7 சதவீதம் உயா்ந்து, ரூ.19,187 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வருடாந்திர வருவாய் ரூ.1.53 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முழு நிதியாண்டில் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.4.20 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.