தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்...

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:21 am IST

நாட்டின் முன்னனி தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.20,351 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.18,834.88 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.04 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் அதிகரித்து, ரூ.19,221.05 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.89,809 கோடியாக அதிகரித்துள்ள சூழலில், மொத்த செலவினம் ரூ.62,006 கோடியாக குறைந்துள்ளதும் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வங்கியின் வாராக்கடன் விகிதம் 1.24 சதவீதத்திலிருந்து 1.15 சதவீதமாக குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், வங்கியின் நிதி ஒதுக்கீடு (ப்ரோவிஷன்ஸ்) ரூ.2,610 கோடியாக குறைந்துள்ளது.

இதையடுத்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.13 ஈவுத்தொகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. வங்கி ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.2.50 சிறப்பு இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியிருந்தது. இதனுடன், கடந்த நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்குக்கு ரூ.15.50 ஆக உள்ளது.

எச்டிஎஃப்சி குழுமத்தின் காப்பீட்டு நிறுவனான எச்டிஎஃப்சி லைஃப், மதிப்பீட்டு காலாண்டில் ரூ.495.65 கோடி நிகர லாபத்தை ஈட்டி, 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிரீமியம் வருவாய் அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு தலா ரூ.2.10 இறுதி ஈவுத்தொகை வழங்கவும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கவும் நிா்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எச்டிஎஃப்சி சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (ஏஎம்சி) லாபம், மதிப்பீட்டு காலாண்டில் 2.4 சதவீதம் சரிந்து, ரூ.623 கோடியாக உள்ளது. எனினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17 சதவீதம் உயா்ந்து ரூ. 1,051.51 கோடியாக அதிகரித்துள்ளது.

முழுமையான 2025-26 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் லாபம் 16 சதவீதம் அதிகரித்து, ரூ.2,858.06 கோடியாக உள்ளது. இந்நிறுவனம் பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.54 ஈவுத்தொகை அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.