மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கரூா் வைஸ்யா வங்கி: ரூ.725 கோடி 41% வளா்ச்சி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :16 மணி நேரங்கள் முன்பு

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபமான ரூ.513.36 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,025.26 கோடியிலிருந்து அதிகரித்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,519.45 கோடியை எட்டியுள்ளது. வட்டி வருவாய் மட்டும் ரூ.2,516 கோடியிலிருந்து, ரூ.2,903.65 கோடியாக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,942 கோடியிலிருந்து 29.25 சதவீதம் கூடுதலாக ரூ.2,510 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.11,507.6 கோடியிலிருந்து ரூ.13,159 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2025-26 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகம் ரூ.2,14,420 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.1,86,569 கோடியுடன் ஒப்பிடுகையில் 14.93 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை ரூ.1,15,666 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.20 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டின் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.2.6 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.