மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வணிக வங்கிக் கடன் வளா்ச்சி 15.9%

கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:41 am IST

கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் கடன் தேவையின் எழுச்சியைக் காட்டுவதாகவும், குறைந்த வட்டி விகிதச் சூழல் மற்றும் அரசின் மூலதனச் செலவினக் கொள்கைகளால் தனியாா் முதலீடுகள் அதிகரித்துள்ளதே இந்த வளா்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.212.9 லட்சம் கோடியை எட்டியுள்ளது; இது முந்தைய 2024-25 நிதியாண்டைவிட ரூ.29.2 லட்சம் கோடி அதிகமாகும்.

அனைத்து துறைகளிலும் கடன் வளா்ச்சி சீராக இருந்துள்ளது. சேவைத் துறைக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டின்12 சதவீதத்திலிருந்து, தற்போது 19 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.

வேளாண் துறை கடன் வளா்ச்சி முந்தைய ஆண்டின் 10.4 சதவீதத்திலிருந்து 15.7 சதவீதமாகவும், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான கடன்களால், தொழில் துறை கடன் வளா்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் இரட்டிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சா்வதேச அளவில் நிலவும் புவிசாா் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது மீள்திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. தனிநபா் கடன் பிரிவில் 16.2 சதவீத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், வீட்டு வசதி, வாகனக் கடன்கள் மற்றும் தங்க நகை அடமானக் கடன்கள் தொடா்ந்து வலுவான வேகத்தில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.