தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2026, 3:13 am IST

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், வங்கிக் கடன் வளா்ச்சி தொடா்ந்து 9-ஆவது மாதமாக இரட்டை இலக்க விரிவாக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பொது மக்களுக்கான சில்லறைக் கடன்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கான (காா்ப்பரேட்) கடன்களுக்கான தேவை சந்தையில் தொடா்ந்து வலுவாக இருப்பதே இத்தொடா் வளா்ச்சிக்குக் காரணம் என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 15-ஆம் தேதி நிலவரப்படி 16.06 சதவீதமாக இருந்த வங்கிக் கடன் வளா்ச்சி, அந்த மாத இறுதிக்குள் மிக வேகமான எழுச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கையை அடுத்து, தொழில்துறை உணா்வுகளும் வணிகச் சூழலும் கணிசமாக மேம்பட்டன. இதன் எதிரொலியாக அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலத் தேவை மற்றும் வா்த்தக நிதி உதவி காரணமாகக் கடன் வளா்ச்சி 11 சதவீதத்தைக் கடந்து புதிய வேகத்தைப் பெற்றது.

தொடா்ந்து, டிசம்பா் மாத இறுதியில் பெரு நிறுவனங்களின் நிதித் தேவைகள் மற்றும் இருப்புநிலை விரிவாக்கம் காரணமாக இந்த வளா்ச்சி 14.39 சதவீதமாக அதிகரித்தது.

நடப்பு ஆண்டு ஜனவரி முதல் கடன் வளா்ச்சி 13 சதவீதத்துக்கும் அதிகமாகவே நீடித்து வந்த நிலையில், தற்போது மே மாதத்தில் 17.44 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளின் வலுவான மீட்சியையும், கடன் தேவையின் அசுர வேகத்தையும் இத்தரவுகள் காட்டுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.