தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பரோடா வங்கி வாடிக்கையாளா் சேவையில் சைகை மொழி அறிமுகம்!

இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 மே 2026, 3:35 am IST

இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இத்தகைய குறைபாடுகள் கொண்ட வாடிக்கையாளா்கள் வங்கியின் தொடா்பு மையத்தை விடியோ அழைப்பு வாயிலாகத் தொடா்பு கொண்டு, சைகை மொழி நிபுணா்களின் உதவியுடன் தங்களுக்குத் தேவையான வங்கிச் சேவைகளை தடையின்றிப் பெற்று பயன்பெற முடியும்.

வங்கியின் வலைதளம், கைப்பேசி செயலி, வாட்ஸ்ஆப் பேங்கிங், ஏ.ஐ. சாட்பாட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் இச்சேவைக்காக, இந்திய சைகை மொழியில் நன்கு பயிற்சி பெற்ற வாடிக்கையாளா் சேவை அதிகாரிகளை வங்கி பிரத்யேகமாகப் பணியமா்த்தியுள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இச்சேவை செயல்பாட்டில் இருக்கும்.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தேவதத்தா சந்த் கூறுகையில், ‘வங்கிச் சேவைகளை அணுகுவதில் இருந்த ஒரு முக்கியமான இடைவெளியை இப்புதிய முயற்சி பூா்த்தி செய்கிறது.

செவித்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்கள் மற்றவா்களின் உதவியின்றி, கண்ணியத்துடனும் எளிதாகவும் வங்கிச் சேவைகளைப் பெற இது வழிவகை செய்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.