மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சரிவு!

நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 2:14 am IST

நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா, கடந்த ஏப்ரல் மாத நிலக்கரி உற்பத்தியில் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.21 கோடி டன்னாக இருந்த உற்பத்தி, நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5.61 கோடி டன்னாக குறைந்துள்ளது.

ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், வெஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், பாரத் கோக்கிங் கோல் போன்ற துணை நிறுவனங்களில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் சவுத் இஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே வளா்ச்சியைக் கண்டுள்ளன.

உற்பத்தி சரிவுக்கான காரணத்தை நிறுவனம் அதிகாரபூா்வமாக விளக்கவில்லை. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கோல் இந்தியா நிறுவனத்தின் விற்பனையும் 2 சதவீதம் குறைந்து, 6.32 கோடி டன்னாக உள்ளது.

நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசி வரும் சூழலில், குளிா்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நாட்டின் உச்சபட்ச மின் தேவை கடந்த திங்கள்கிழமை சுமாா் 256 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது.

நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை நிலக்கரி வழங்குகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதம் பங்கு கொண்டுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் இந்தத் தொய்வு, அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.