மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

News image

பஞ்சாப்-சிந்து வங்கி - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:20 pm IST

அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.

வங்கியின் வாராக் கடன் குறைவாக இருந்ததும், ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததால், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 35% உயர்ந்து ரூ.422 கோடியாக இருப்பதாக அறிவித்தது பஞ்சாப் & சிந்து வங்கி. இதுவே, கடந்த ஆண்டு, வங்கி ரூ.313 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 3,836 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 3,457 கோடியாக குறைந்துள்ளதாகப் பஞ்சாப் & சிந்து வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில், அதன் வட்டி வருமானமும் ரூ. 3,159 கோடியிலிருந்து ரூ. 3,030 கோடியாக குறைந்துள்ளது.

சொத்தை பொறுத்தவரை, வங்கியின் மொத்த வாராக் கடன், மார்ச் 2025 இறுதியில் 3.38% ஆக இருந்த நிலையில், தற்போது மொத்தக் கடன் வழங்கல்களில் இது 2.4% ஆக குறைந்துள்ளது. வங்கியின், நிகர வாராக் கடன் முன்னதாக 0.96% ஆக இருந்த நிலையில், தற்போது 0.79% ஆக குறைந்துள்ளது.

வங்கியின் மூலதன விகிதம், 2025 நிதியாண்டின் இறுதியில் இருந்த 17.41 சதவீதத்திலிருந்து, 17.42 சதவீதமாக சற்று மேம்பட்டுள்ளது.

2025-26 முழு நிதியாண்டுக்கான வங்கியின் லாபம், கடந்த ஆண்டு ரூ. 1,016 கோடியாக இருந்த நிலையில், தற்போது 30% உயர்ந்து ரூ. 1,322 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 13,049 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 13,759 கோடியாக உயர்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் 39 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதே வேளையில், பங்குதாரர்களின் ஒப்புதலும் பெறவேண்டும் என்றது.

Summary

Shares of Punjab & Sind Bank, slipped as much as 2.72% to rupees 25 a piece on the NSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.