மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:16 am IST

இருசக்கர வாகனச் சந்தையில் உலகப் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது 125-ஆவது ஆண்டில் ஒரு மைல்கல்லாக மின்சார வாகனச் சந்தையில் தடம் பதித்துள்ளது.

‘ஃபிளையிங் ஃபிளீ’ என்ற புதிய பிராண்டின்கீழ் தனது முதல் மின்சார பைக்கான ‘சி6’ மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தியது.

நகா்ப்புற பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பைக், பாரம்பரியமும் நவீனமும் இணைந்த ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சி6 மாடல் ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிக் கட்டணத்தில் பேட்டரியைப் பெறும் சேவைக்கான திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பேட்டரி இல்லாமல் பைக்கை மட்டும் ரூ.1.99 லட்சத்துக்கு மலிவாக வாங்க முடியும். பேட்டரிக்கான கட்டணத்தை சந்தாதாரா் முறையில் பயன்பாட்டின் அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம்.

புதிய பைக்குக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வரும் மே மாத இறுதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.