மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image

தங்கம் விலை - ANI

Updated On :10 ஏப்ரல் 2026, 10:07 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,11,920 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ. 1,10,880, புதன்கிழமை ரூ. 1,13,600, வியாழக்கிழமை ரூ. 1,12,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,125-க்கும், ஒரு சவரன் ரூ. 1,13,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.

இதேபோல் வெள்ளியில் விலையும் இன்று காலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 அதிகரித்து ரூ. 2,65,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Today Gold and Silver Price in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.