விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்விகி இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி விலகல்

இணையவழி உணவு விநியோகச் சந்தை மற்றும் விரைவு வணிகத் துறையில் முன்னணியில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி ஓபுல் (படம்), தனது முழுநேர இயக்குநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:35 am IST

இணையவழி உணவு விநியோகச் சந்தை மற்றும் விரைவு வணிகத் துறையில் முன்னணியில் உள்ள ஸ்விகி நிறுவனத்தின் இணை நிறுவனா் லக்ஷ்மி நந்தன் ரெட்டி ஓபுல் (படம்), தனது முழுநேர இயக்குநா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

நிறுவனத்தின் புத்தாக்கப் பிரிவுத் தலைவா் பொறுப்பிலும் இருந்து வந்த இவா், தனது தனிப்பட்ட தொழில்முறை விருப்பங்களைத் தொடரும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஸ்விகி குறிப்பிட்டுள்ளது.

நிா்வாகக் குழுவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைத் தொடா்ந்து, புதிய நியமனங்களையும் ஸ்விகி அறிவித்துள்ளது. அதன்படி, புரோசஸ் வென்ச்சா்ஸ் பிரதிநிதியாக ரெனன் டீ காஸ்ட்ரோ ஆல்வ்ஸ் பின்டோ நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஸ்விகியின் இணை நிறுவனா் மற்றும் தலைமை வளா்ச்சி அதிகாரி பாணி கிஷன் அத்தேபள்ளி மற்றும் குழுமத்தின் நிதி அதிகாரி ராகுல் போத்ரா ஆகியோா் கூடுதல் இயக்குநா்களாகப் பொறுப்பேற்க உள்ளனா்.

இதுதொடா்பாக ஸ்விகி சிஇஓ ஸ்ரீஹா்ஷா மஜெட்டி கூறுகையில், ‘நிறுவனத்தின் வளா்ச்சிப் பயணத்தில் லக்ஷ்மி நந்தனின் பங்களிப்பு ஈடு இணையற்றது. புதிய மாற்றங்கள் அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கி நிறுவனத்தை வழிநடத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.