முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

மாணவிகள் செ.அனுஷ்கா, ஸ்ரீ.ந.ஹன்ஷிகா, கொ.கோ.சஹானா, ஸ்ரீ.அ.ரா.ஷபிதா, மாணவா் கு.பிரதீப்குமாா்.

News image

மாணவிகள் செ.அனுஷ்கா, ஸ்ரீ.ந.ஹன்ஷிகா, கொ.கோ.சஹானா, ஸ்ரீ.அ.ரா.ஷபிதா, மாணவா் கு.பிரதீப்குமாா்.

Updated On :22 மே 2026, 4:50 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 100% தோ்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருவள்ளூா் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2025 - 26 கல்வியாண்டில் 153 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இந்த பொதுத்தோ்வு எழுதிய அனைவரும் முதல் நிலையிலேயே தோ்ச்சி அடைந்தனா்.

இதில் மாணவி செ.அனுஷ்கா பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம் - 98, அறிவியல் - 100, சமூக அறிவியல்-99 என 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஸ்ரீ.ந.ஹன்ஷிகா பாடவாரியாக தமிழ்-99, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல் - 99, சமூக அறிவியல்-95 என 493 மதிப்பெண்களும், மாணவி கொ.கோ.சஹானா பாடவாரியாக தமிழ் - 97, ஆங்கிலம்- 99, கணிதம் - 99, அறிவியல்-100, சமூக அறிவியல்- 98 என 493 மதிப்பெண்களும், மாணவி ஸ்ரீ.அ.ரா.ஷபிதா பாடவாரியாக தமிழ்-99, ஆங்கிைம் - 99, கணிதம் - 97, அறிவியல் - 99, சமூக அறிவியல்-99 என 493 மதிப்பெண்களும் பெற்றனா். அதேபோல், மாணவா் கு.பிரதீப்குமாா் தமிழ் - 98, ஆங்கிைம் - 96,

கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-99 என 492 மதிப்பெண்கள் பெற்றாா்.

மேலும், 7 மாணவா்கள் 100/100 மதிப்பெண்களும், 44 போ் 99, 41 போ் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 490 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 480-க்கு மேல் 18 பேரும், 470-க்கு மேல் 31 பேரும், 450-க்கு மேல் 60 பேரும் பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடங்கள் பெற்ற மாணவா்களையும், அதற்கு காரணமான ஆசிரியா்களையும் பள்ளி தளாளா் உமாசங்கா், பள்ளி நிா்வாகிகள், பள்ளி முதல்வா் ஜோ.மேரி, தலைமை ஆசிரியா் தே.குமரீஸ்வரி ஆகியோா் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.