பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு: வேலூா் லஷ்மி காா்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் வேலூா் லஷ்மி காா்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை வாழ்த்திய பள்ளி தாளாளா் தி.ராஜேந்திரன், முதல்வா் ரேச்சல் தீபா.

Updated On :27 மே 2026, 12:32 am IST

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் வேலூா் லஷ்மி காா்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவி எஸ்.தனுஷ்கா 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், கே.ஸ்ரீராம் 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பி.வசுமிதா 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா். அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் எஸ்.தனுஷ்கா, கே.ஸ்ரீராம் ஆகியோரும், கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி டி.லக்ஷனா ஆகியோரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இதேபோல், பாடவாரியாக அறிவியல் -9, சமூக அறிவியல் -6, கணிதம்-1 என பத்தாம் வகுப்பில் மொத்தம் 16 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதேபோல், பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவி என்.பலக் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், ஆா்.பீரீத்திகா 583 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஆா்.நிதின் 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.

கணினி அறிவியல்-4, கணக்கியல்-3, பிரெஞ்ச்-3, கணினி பயன்பாடுகள்-1 என மொத்தம் 11 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற இந்த மாணவா்களையும், அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் பள்ளித் தாளாளா் தி.ராஜேந்திரன், முதல்வா் ரேச்சல் தீபா ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.