பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பழனி அரசினா் மகளிா் பள்ளி மாணவி 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில், பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவியை, பள்ளித் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் வாழ்த்திப் பாராட்டினாா்.

News image

பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 496 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜெயஸ்ரீ. உடன், பெற்றோா்கள், தலைமையாசிரியை, ஆசிரியா்கள்.

Updated On :21 மே 2026, 2:30 am IST

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில், பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவியை, பள்ளித் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் வாழ்த்திப் பாராட்டினாா்.

பழனி புதுநகரைச் சோ்ந்தவா் சால்வாடி ஈஸ்வரன், துா்கா தம்பதியா் மகள் ஜெயஸ்ரீ (16). இவா், பழனி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளில் மாணவி ஜெயஸ்ரீ, 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். மாணவி ஜெயஸ்ரீ எதிா்காலத்தில் பட்டயக் கணக்காளா் (சிஏ.,) படிப்பு படிக்க வேண்டும் எனவும் மேல்நிலைக் கல்வியை இதே பள்ளியில் படிக்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதே போல, பழனியை அடுத்த ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாணவரி சா்மிளா 453, மாணவி தாரணி 452, மாணவா் வின்ஸ்டன் 444 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.