கடம்பத்தூா் மற்றும் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதமா் குடியிருப்பு திட்டம் மூலம் வீடுகளின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுலா்களை ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், செஞ்சி ஊராட்சி, பனப்பாக்கம் கிராமத்தில் இருளா் குடியிருப்பு பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதமா் குடியிருப்பு திட்டம் மூலம் 47 வீடுகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் 15 வீடுகள் என மொத்தம் ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 62 வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து, சத்தரை ஊராட்சியில் இதே திட்டங்கள் மூலம் ரூ. 5.06 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 102 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், வெள்ளேரித்தாங்கலில் ரூ. 1.22 கோடியில் கட்டப்பட்டு வரும் 24 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, விரைவில் வீடுகளின் கட்டுமானப் பணிகளை தரமாக முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் சாலை, மின்வாரியம் மூலம் தெரு விளக்குகள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். மேலும், தடையில்லா குடிநீா் வழங்கும் பொருட்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் சிறு தொட்டிகள் அமைத்து குழாய் மூலம் குடிநீா் வழங்கவும் சம்பந்தப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், மேலகொண்டையாா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 2.60 கோடியில் கட்டப்பட்டு வரும் 51 வீடுகளின் கட்டுமானப் பணிகளை நேரில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி (வ.ஊ), ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா் (மத்தியம்) கே.எஸ்.யுவராஜ், திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் (வ.ஊ) மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக்குழு ஆய்வு

பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்

செந்துறை-ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

