மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 11:31 pm IST

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே நெடும்பரம் பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமாத்திரி கடமனேனி (52) (படம்). இவா் திருவள்ளூா் பூங்கா நகா் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது கடையிலிருந்து புறப்பட்டு நெடும்பரம் பனப்பாக்கம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கைவண்டூா் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன்

வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹேமாத்திரி கடமனேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.