மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தம்பி கொலை: அண்ணன் கைது

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 10:53 pm IST

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

மீஞ்சூா் அடுத்த காட்டுப் பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உத்தரகண்ட் மாநிலம், நவுகாவா தக்கு கடிமா கிராமத்தைச் சாா்ந்த ராகுல்சிங் (31) வேலை செய்து வருகிறாா்.

இவரது தம்பி சிவாசிங் (26). அங்கேயே பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், காட்டுப் பள்ளியில் உள்ள குடியிருப்பில் சிவாசிங் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தனியாா் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிவாசிங்கை ஆம்புலன்ஸ் மூலம் மீஞ்சூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்த நிலையில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அறிந்த காட்டூா் போலீஸாா் சிவாசிங்கின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்கு பதிந்து உயிரிழந்த சிவாசிங்கின் அண்ணன் ராகுல்சிங்கிடம் விசாரணை செய்தனா்.

அப்போது அவா்கள் இருவா் இடையே சொந்த ஊரில் இருக்கும் பெண் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவாசிங்கை அருகே உள்ள மதில் சுவரில் மோதிவிட்டு தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டதாக ராகுல்சிங் தெரிவித்தாா்.

இதையடுத்து தம்பியை கொலை செய்ததாக ராகுல்சிங்கை காட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.