மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!

சென்னை கோயம்பேட்டில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்தததாக நாடகமாடிய தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:35 am IST

சென்னை கோயம்பேட்டில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்தததாக நாடகமாடிய தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், பேரணாம்பேட்டு லால் மஸ்ஜித் தெருவைச் சோ்ந்தவா் தா.முகமது தன்ஜூா் (25). இவா், சென்னை பெரியமேட்டில் மு.தன்வீா் அகமது என்பவா் நடத்தி வரும் அலுமினிய பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். முகமது தன்ஜூா் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் ரூ.14 லட்சத்தை கோயம்பேட்டில் உள்ள ஒரு கடையில் இருந்து பெற்றுக் கொண்டு ஆட்டோவில் மதுரவாயலில் வசிக்கும் ஒரு நபரிடம் கொடுக்கச் சென்றாா்.

ஆனால் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது, அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸாா், தன்னிடமிருந்த ரூ.14 லட்சத்தைப் பறித்துக் கொண்டதாக தன்ஜூா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அவரது புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் தன்ஜூா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து சம்பவம் நடைபெற்ாக கூறப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

அப்போது, வழிப்பறி சம்பவமே நடைபெறவில்லை என்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தன்ஜூரிடம் மீண்டும் விசாரணை செய்தனா்.

இதில், வழிப்பறியில் ரூ.14 லட்சத்தை போலீஸாா் பறித்ததாக தன்ஜூா் நாடகமாடியதும், அந்தப் பணத்தை அவரே வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் தன்ஜூரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.