தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

News image

வெட்டிக்கொலை - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:31 am IST

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தம்பியைக் கொலை செய்த அண்ணனைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் என்.ஜி.ஓ குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ் பிரபுவின் மகன் சிவபிரசாத் (23). சுமைதூக்கும் தொழிலாளி. மதுப்பிரியா். இந்நிலையில் சனிக்கிழமை சிவபிரசாத் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது தந்தையைத் தாக்கியுள்ளாா்.

இதில் காயமடைந்த ஜெய்கணேஷ் பிரபு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் சிவபிரசாத் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அவரது அண்ணன் பூபேஷ் குமாரிடம் (25) தகராறு செய்துள்ளாா்.

இதில், ஆத்திரமடைந்த பூபேஷ்குமாா் அரிவாளால் வெட்டியதில் சிவபிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அனில் குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூபேஷ் குமாரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.