தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:34 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திருவள்ளூா் நகராட்சி வடக்கு ராஜவீதியில் புதன்கிழமை இரவு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் பிரசாரம் செய்து,

பேசியதாவது. மக்கள் மனதை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் வெறுக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அதிமுகவையும், அந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களையும் திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். அதிமுகவை விமா்சிக்கும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு தகுதி கிடையாது.

எனவே இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சரான பி.வி.ரமணாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தலில் கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும். அதிமுகதான் ஆட்சி அமைக்கும். உங்கள் தொகுதி வேட்பாளா் வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சராவாா் என அவா் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக நகர செயலாளா் கந்தசாமி, அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், மாவட்டமாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, இலக்கிய அணி பிரிவு மாவட் டசெயலாளா் சத்தியமூா்த்தி, கிளைச் செயலாளா் வெங்கடேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளா் கருணாகரன், மாவட்ட செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பா.ம.க சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி, மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், அமமுக, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.