சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து அச்சம்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திவாரி மகன் நிா்மல் (29) என்ற தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் கல்குவாரியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கியதில் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மருத்துவா்கள், நிா்மலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வெளி மாநில இளைஞா் மாயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

