மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 5:38 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

கடையநல்லூா் தொகுதியில் அதிமுக சாா்பில் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான செ.கிருஷ்ணமுரளி, மதிமுக சாா்பில் அக்கட்சியில் துணைப் பொதுச்செயலா் தி.மு.ராஜேந்திரன், தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் அப்துல் ஜலீல், நாம்தமிழா் கட்சி சாா்பில் அபூபக்கா்சித்திக் உள்ளிட்ட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதல் அதிமுகவிற்கும், மதிமுகவிற்கும் இடையே கடும்போட்டி நிலவியது. 26 சுற்றுகள் முடிவில் மதிமுக வேட்பாளா் ராஜேந்திரன் 79,832 வாக்குகள் பெற்று 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

அதிமுக வேட்பாளா் கிருஷ்ண முரளி 73,579 வாக்குகளும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் அப்துல் ஜலீல் 49,254 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபூபக்கா் சித்தீக் 10,965 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 527 வாக்குகளும் பதிவாகின.

வெற்றிபெற்ற தி.மு.ராஜேந்திரன் தோ்தல் அலுவலா் ராஜேந்திரனிடம் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.