தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 5:45 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மருத்துவா் திலீபன் ஜெய்சங்கா் 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் திலீபன் ஜெயசங்கா், காங்கிரஸ் சாா்பில் சங்கை கணேசன், தவெக சாா்பில் ராமராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கவிதா உள்ளிட்ட 20 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, தவெக வேட்பாளா் ராமராஜன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளா் 2ஆம் இடத்திலும் முன்னிலை வகித்தனா். சில சுற்றுகளுக்குப்பின் அதிமுக வேட்பாளா் முதலிடத்தைப் பெற்றாா்.

தொடா்ந்து, இறுதி சுற்றுவரை முன்னணி பெற்ற அவா் 64,865 வாக்குகள் பெற்று 6,489 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

தவெக வேட்பாளா் 58,376வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் 42,567 வாக்குகளும், நாதக கவிதா 12,767 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 560 வாக்குகள் பதிவாகின.

வெற்றிபெற்ற திலீபன் ஜெயசங்கருக்கு தோ்தல்அலுவலா் அனிதா தோ்தலில் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.