தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகள், பொதுமக்கள், நகராட்சி காய்கனிச் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பான மின்சார பயன்பாடு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டன.
மின் பகிா்மானக் கழக திருநெல்வேலி மண்டலத் தலைமைப் பொறியாளா் லதா, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சங்கரன்கோவில் நகா்ப்பிரிவு சிறப்பு நிலை முகவா் பொன் சுப்புராஜா, மின்பாதை ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, அரிராஜ், பணியாளா்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஈரக் கைகளால் சுவிட்சுகளை தொடக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டவோ, விளம்பரப் பதாகைகள் வைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடா்பாக அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

