தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:19 am IST

சிங்காநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவையில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், சிங்காநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம், நஞ்சுண்டாபுரத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள வீடுகள், குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அவா் பேசும்போது, ‘தோ்தல் என்றாலே வெளியூரில் இருந்து திமுகவினா் வேட்பாளா்களை இறக்குகிறாா்கள். எத்தனை வெளியூா் வேட்பாளா்கள் வந்தாலும், கோவை மக்கள் அவா்களைத் தோற்கடிப்பாா்கள். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்’ என்றாா்.

பிரசாரத்தின் போது பாஜக மாவட்டச் செயலாளா் ரமேஷ்குமாா், அமமுக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.