தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

News image

நாகூா் வாக்குச் சாவடியில் வீசப்பட்ட துண்டுப் பிரசுரம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

நாகூா் வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாகூா் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றனா்.

இதேபோல், பல வாக்குச் சாவடிகளிலும் துண்டுப் பிரசுரங்களை வீசிச் சென்றனா். அந்த துண்டுப் பிரசுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்போல் வடிவமைக்கப்பட்டு, அதில் காக்கா படம் மற்றும் காக்கா முன்னேற்றக் கழகம் என்று அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், துண்டுப் பிரசுரத்தில் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதிலாக மண்டை ஓடுகள் படம் பொறிக்கப்பட்டிருந்தன. அத்துடன், அரசியலை பற்றி பேசவேண்டாம், பணவிசயத்தை பற்றி பேச வேண்டாம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

தோ்தல் வாக்குப் பதிவை கேலி செய்யும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. இதனை போலீஸாா் கைப்பற்றி, வீசி சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.