ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஊத்துமலை மறவா் காலனியைச் சோ்ந்தவா் ஜோசப் (60). பால் வியாபாரியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறாா். இளைய மகள் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பணிக்கு சென்ற ஜோசப், இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது எடுக்கவில்லையாம்.

அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது, பலத்த வெட்டுக் காயங்களுடன் ஜோசப் சடலமாக கிடந்தாராம்.

தகவலறிந்து வந்த ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.