மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

News image

தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு ஆதரவாக ஊத்துமலையில் பிரசாரம் செய்த டி.டி.வி. தினகரன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 3:57 am IST

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீா்வு கிடைக்கும்.

ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இணைந்துள்ளோம். திமுக ஆட்சியில் அவா்கள் கூறிய ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மின்சார கட்டணத்தை 67 சதவீதம் உயா்த்தியதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்காசியில் ரூ. 119 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது திறக்கப்படும், மேலும் ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ஊத்துமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.