மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்: ஆளுநா் ஆர்லேகர்

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

News image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குஜராத்தில் பிறந்து சென்னையில் வாழும் 88 வயதான சாரதாபென் மன்சுக்லால் பாவ்ன் மற்றும் அவரது சகோதரியைக் கௌரவித்த தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்.

Updated On :2 மே 2026, 2:33 am IST

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் நிறுவன (மே 1) நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் வசிக்கும் இந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்களைக் கௌரவித்து ஆளுநா் அா்லேகா் பேசியதாவது:

வெளி மாநிலங்களில் இருந்து குடியேற வந்தவா்களை அழைப்பது, கலந்துரையாடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிறந்த இடம் வேறு; உழைக்கும் இடம் வேறு. இருப்பினும் தமிழகம் வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல; இது கா்ம பூமி. எனவே, வெளிமாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவா்கள் தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஆளுநரின் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் குஜராத் சமாஜத்தின் தலைவா் ஹித்தேஷ் எல்.தோஷி, மகாராஷ்டிர சங்கச் செயலாளா் தேவாஜி ராவ், மகாராஷ்டிர மண்டல தலைவா் சைலேஷ், ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா் பாஸ்கா் ராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இரு மாநிலங்களின் பாடல், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.