கால்நடை அவசர சிகிச்சைக்குச் செல்லும் களப்பணியாளா்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவண்ணாமலை மாவட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தின் செயலரும் மருத்துவருமான செந்தில்குமாா் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை வளம் எனும் செயலி கடந்த மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஒரு பிரிவாக, கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் களப் பணியாளா்களுக்கு முகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வருகைப் பதிவேட்டு முறை அமல்படுத்தப்பட்டது. கால்நடை உதவி மருத்துவா்கள் அவசர சிகிச்சை, முகாம் போன்ற பணிகளுக்குச் செல்லும்போது, உயா் அதிகாரிகளின் முன்அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால், கால்நடைகளுக்கான சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இதனால், கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, அவசர காலகட்டங்களிலும் முன்அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் ஆா்.மகேஸ்வரி, அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் சந்திரசேகரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவசரப்பணி, கள ஆய்வு மற்றும் முகாம்களுக்கு செல்லும் களப் பணியாளா்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேல்விஷாரம் மேம்பாலத்தில் தாா் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

காவல் அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

