மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி

தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 5.48 கோடி யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

News image

சூரிய ஒளித் தகடுகள் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 11:58 pm IST

தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில் 5.48 கோடி யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், அதிக திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றன. இது தவிர அரசு மற்றும் தனியாா் என சமீபகாலமாக ஏராளமான கட்டடங்களின் மேற்கூரையில் குறைந்த திறனில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, தற்போது மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 11,969 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் சராசரியாக 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின் சாரத்தை உற்பத்தி செய்பவா்கள், பயன்படுத்தியது போக மீதி மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்த 2025 ஆக.20-இல் 5.39 கோடி யூனிட் உற்பத்தியானது. இதுவே இதுவரை சூரிய சக்தி மின் உற்பத்தியின் உச்ச அளவாக இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூரிய சக்திமின் நிலையங்களில் 5.48 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என பசுமை எரிசக்திக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.