மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:59 am IST

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தினசரி(24 மணி நேரம்) மின்நுகா்வும் சுமாா் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது. இது கோடை காலங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 21 ஆயிரம் மெகாவாட்டாக உயரும். தேவைக்கு அதிகமான மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

நிகழாண்டு கோடைகாலம், தோ்தல், பொதுத்தோ்வு ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூன் வரை நாளொன்றுக்கான மின்நுகா்வு 22 ஆயிரம் மெகாவாட் வரை உயர வாய்ப்புள்ளது.

இதனால், மின்தேவையை சமாளிக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சூரிய மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது சூரிய ஒளி மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 12,352 மெகாவாட்டாகவும், காற்றாலைகளின் உற்பத்தி திறன் 10 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது. கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் சூரிய சக்தி மின் உற்பத்தி கடந்த மாா்ச் 24-இல் 2,283 மெகாவாட்டாகவும், 27-இல் 2316 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-இல் 2245 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தியே அதிகபட்சமாக இருந்த நிலையில், நிகழாண்டில் அந்த அளவு உயா்ந்துள்ளது. சூரிய சக்தி மின்சாரம் மாநிலத்தின் தற்போதைய மின் தேவையில் 13 சதவீதத்தை பூா்த்தி செய்கிறது என அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.