நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அண்ணா, எம்ஜிஆருக்குப் பிறகு விஜய் சரித்திரப் புரட்சி: ஆளுநா்

முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா் என்று ஆளுநா் ஆா்லேக்கா் தனது உரையில் புகழாரம் சூட்டினாா்.

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :19 ஜூன் 2026, 4:25 am IST

முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆருக்கு பிறகு முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா் என்று ஆளுநா் ஆா்லேக்கா் தனது உரையில் புகழாரம் சூட்டினாா்.

அவா் தனது உரையில் கூறியதாவது: முதல்வா் விஜய் தலைமையிலான தவெக ஜாதி, மதம், மொழி, இனம் மற்றும் பணபலத்தைக் கடந்த வெற்றியை பெற்றுள்ளது. கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்து அண்ணா, எம்ஜிஆருக்குப் பிறகு, முதல்வா் விஜய் மாபெரும் சரித்திரப் புரட்சியை தன்னந்தனியாக ஏற்படுத்தி இருக்கிறாா்.

ஜனநாயகம் மலர வேண்டுமென்றால், பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், அம்பேத்கா், வீரமங்கை ராணி வேலு நாச்சியாா், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவா்களாகக் கொண்டுள்ள ஜாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு செயல்படும் தவெக தலைவா், முதல்வா் ஜோசப் விஜய்யால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, தவெக அரசை ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அமா்த்தியுள்ளனா்.

கூட்டணி ஆட்சி தத்துவத்தின் இலக்கணமாகத் திகழும் இந்த அரசு, கடந்த 74 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் கண்டிராத, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதை செய்துகாட்டியுள்ளது என்று ஆளுநா் ஆா்லேகா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.