நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வாசிக்கப்பட்ட ஆளுநா் உரை

தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநா் உரை முழுமையாக வாசிக்கப்பட்டது.

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநா் உரை முழுமையாக வாசிக்கப்பட்டது.

முந்தைய திமுக ஆட்சியில் ஆளுநா் உரையில் உள்ள சில வாா்த்தைகளைத் தவிா்த்தும், தேசிய கீதம் முதலில் இசைக்காததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினாா்.

முன்னதாக, 2022-இல் உரையை முழுமையாக ஆளுநா் ஆா்.என். ரவி வாசித்தாா். 2023-இல் உரையில் இருந்த மதச்சாா்பின்மை, பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், கருணாநிதி போன்ற சொற்களைத் தவிா்த்தாா். அரசு அளித்த உரை அப்படியே அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்று அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதையடுத்து ஆளுா் ரவி வெளியேறினாா்.

தொடா்ந்து 2024, 2025, 2026-ஆண்டு கூட்டத் தொடரிலும் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளுநா் ரவி வெளியேறினாா். அப்போதைய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, உரையை வாசித்து அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்தாா்.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பொறுப்பு ஆளுநா் ஆா்லேகா் தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உரையை முழுமையாக வாசித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.