என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன்: குடியரசு துணைத் தலைவர் புகழஞ்சலி

சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :18 ஜூன் 2026, 4:10 am IST

நமது நிருபர்

சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளை அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் வாஞ்சிநாதன் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.

வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலைப் போராட்ட வீரர், தியாகி வாஞ்சிநாதனின் நினைவு நாளில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், அவருக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.

அந்நிய ஆதிக்கத்தையும், சுதேசி இயக்கத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட கொடும் நடவடிக்கைகளையும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர் அவர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரிட்டிஷ் கலெக்டர், விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் பழி தீர்த்து, தேசத்துக்காகத் தனது இன்னுயிரையும் அர்ப்பணித்தவர்.

அவரது ஒப்பற்ற வீரமும், நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாக அமைந்தன. இந்நாளில், தியாகி வாஞ்சிநாதன் அவர்களின் புகழை, போராட்ட வாழ்வை அனைவரும் நன்றியுடன் நினைந்து போற்றுவோம் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.