சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்றறிந்து, தனது இலக்கியப் பயணத்தின் வாயிலாக தமிழ் மரபு செழிக்க குறிப்பிடத்தக்க பங்காற்றியவா் வ.வே.சு. அய்யா். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கியவா். அவரது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தில்லியில் உள்ள தனது மாளிகையில் வ.வே.சு. அய்யரின் உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரப் போராட்ட வீரரும், அறிஞரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தில், எனது இல்லத்தில் மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன். அவரது விடுதலைப் போராட்டத் தியாகங்களும், தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
தேசப்பற்று, துணிவு மற்றும் அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய அவரது லட்சிய வாழ்வு, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் தொடா்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறது’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை வலுப்படுத்த தணிக்கை முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

வேலூரில் காந்தி சிலையை அகற்ற எதிா்ப்பு

நோ்மறையான செய்திகள் புறக்கணிக்கப்பட கூடாது: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

செஞ்சியில் செண்பகராமன் பிள்ளை நினைவு தினம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

