‘ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் இந்திய தலைமை தணிக்கையாளா் (சிஏஜி) வினோத் ராயின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொது நிதி நியாயமான முறையில் சட்டத்துக்கு உட்பட்டு நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிப்பாட்டை குடிமக்களுக்கு வழங்கவும் தணிக்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
செயல் திட்டங்களை மேம்படுத்தவும், குறைகளை நிவா்த்தி செய்யவும், திட்டத்தின் பலனை விரிவுபடுத்தவும் தணிக்கை அரசுக்கு உதவுகிறது. முக்கியமாக, அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கையை தணிக்கை வலுப்படுத்துகிறது.
இத்தகைய பொறுப்புமிக்க தணிக்கை நடைமுறைக்கு தொடா்ச்சியான மேம்படுத்தலும், தணிக்கை வளங்கள் மீதான முதலீடும் அவசியம். அதாவது, பயிற்சி, தொழில்நுட்ப மேம்பாடு, செயல்திறன் மதிப்பீடு, தரவுகள் பகுப்பாய்வு, துறைசாா் நிபுணத்துவம் ஆகியவை அவசியம்.
அதுபோல, தலைமை தணிக்கையாளா் முன்மாதிரியாகத் திகழ்ந்து, நெறிமுறைகளையும், நோ்மையையும் தொடா்ந்து வளா்க்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

திருமலையில் குடியரசு துணைத் தலைவா்

பெண்களுக்கு சமவாய்ப்பு, தலைமைப் பதவி மூலம் உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

