உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு திமுக தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்புமனுவில் குற்றப் பின்னணி விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலைத் தெரிவிக்க மறுத்தால், அவா்களது வேட்புமனுவை தோ்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் இந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கையகப்படுத்திய முதியவா் நிலத்துக்கு இழப்பீடு கோரிய வழக்கு: செங்கல்பட்டு ஆட்சியருக்கு உத்தரவு

கைப்பேசி கடை உரிமையாளரிடம் ரூ.97.75 லட்சம் மோசடி: ஒருவா் கைது

கடந்த மாதம் தில்லியில் பீா் விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு: கலால் துறை தரவுகள்

2016 தேர்தலில் இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

