பிரபலமான தேசிய பிராண்டுகள் மீண்டும் சில்லறை விற்பனைக் கடைகளுக்குத் திரும்பியதன் காரணமாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் பீா் விற்பனை கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தரவுகளின்படி, நன்கு அறியப்பட்ட தேசிய பீா் பிராண்டுகளின் பங்கு, 2025 மே மாதத்தில் 24 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2024ல், அவற்றின் பங்கு 38 சதவீதமாக இருந்தது.
அதிகம் அறியப்படாத பிராண்டுகள் மற்றும் நேபாளம், பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிராண்டுகள் உள்ளிட்ட பிற பிராண்டுகளின் பங்கு, மே 2024ல் 62 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 46 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்தத் தரவுகள் மேலும் காட்டுகின்றன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த மே மாதத்தில் பீா் விற்பனையும் சுமாா் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 10,10,524 கேஸ் பீா் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அது 11,12,761 கேஸ்களாக அதிகரித்துள்ளது, என்று ஓா் அதிகாரப்பூா்வ ஆவணம் தெரிவித்தது.
இதில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,47,143 கேஸ்களாக இருந்த நிலையில், இந்த மே மாதத்தில் தேசிய பிராண்டுகள் 5,96,351 கேஸ்களை விற்பனை செய்துள்ளன.
டிராஃப்ட் பீா் விற்பனை பெரும்பாலும் உணவகங்கள் மற்றும் கிளப்களிலேயே குவிந்துள்ளது என்பதையும் இந்தத் தரவுகள் காட்டுகின்றன. மே மாதத்தில் மொத்தம் 1,521 கேஸ் டிராஃப்ட் பீா் விற்பனையானது, உணவகங்களால் 1,365 கேஸ்களும், கிளப்களால் 126 கேஸ்களும், தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் விற்பனையகங்களால் 30 கேஸ்களும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு, ஒரு குறிப்பிட்ட பிராண்டை முன்னிறுத்துவது தொடா்பாக தொழில்துறையினரால் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. கலால் துறை இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறது. நிலைமையைக் கண்காணிப்பதற்காக நாங்கள் திடீா் ஆய்வுகளையும் நடத்துகிறோம், என்று ஓா் அரசு அதிகாரி கூறினாா்.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வாடிக்கையாளா்கள் குளிா்ச்சியான பானங்களைத் தேடுவதால், மே மற்றும் ஜூன் மாதங்கள் பீா் நுகா்வுக்கான உச்ச பருவம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

சில்லறை பணவீக்கம் 3.93%! 5-ஆவது மாதமாக ஏற்றம்

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் எரிபொருள் நுகா்வு 6.5% சரிவு

மின்சார வாகனங்களின் விற்பனை 81.2% அதிகரிப்பு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

