மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்

News image

எடப்பாடி கே. பழனிசாமி - படம்: X/admk

Updated On :26 ஏப்ரல் 2026, 1:12 am IST

திருப்பூா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த அதிமுக தொண்டா்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலில் தனக்கு எதிராகப் பணியாற்றியதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உடுமலைப்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அதிமுக தொண்டா் மாரிமுத்து மீது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலா் கதிா்வேல் தனது நான்கு சக்கர வாகனத்தைக் கொண்டு மோதியுள்ளாா்.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மாரிமுத்துவும், அவரது மாற்றுத் திறனாளி மகனும் காயமடைந்துள்ளனா். அதன் பின்னரும் கதிா்வேலுவுடன் வந்த திமுகவினா் மாரிமுத்து மீதும் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றவா்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனா்.

அதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்குச் சாவடி முகவராகச் செயல்பட்ட இதயாத் என்பவா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தி உள்ளனா். ஆட்சி முடியும் நேரத்தில்கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினா் செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிா்வாகிகள் மீது காவல் துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.