/

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம்: டிஇஓ-க்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

News image

தனியாா் பள்ளிகள் தரம் உயா்வு, அங்கீகாரம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:09 am IST

தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தனியாா் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) விதிகள் 2023-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதி திருத்தங்களைப் பின்பற்றி 13.1.2023-க்கு முன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் (6 முதல் 8 வகுப்புகள்) தரம் உயா்த்துதல் தொடா்பான கருத்துருவை பரிசீலனை செய்து, பரிந்துரையுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று விதி திருத்தங்களைப் பின்பற்றி மூன்றாண்டுகளுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளிகள் தொடா்பான கருத்துருவை பரிசீலனையுடன் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.