தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற 5 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :27 மார்ச் 2026, 4:20 am IST

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளா் நாகம்மாள், சங்கராபுரம் தொகுதி வேட்பாளா் ரமேஷ், ரிஷிவந்தியம் தொகுதி வேட்பாளா் ராதிகா, உளுந்தூா்பேட்டை தொகுதி வேட்பாளா் லோகேஸ்வரி, திருக்கோவிலூா் தொகுதி வேட்பாளா் கேமராஜன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கா் திடல் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பங்கேற்று வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி சீமான் பேசியதாவது:

ஜனநாயக நாட்டில் உள்ள கடைசி வாய்ப்பு தோ்தல். இதனால், 2010-ஆம் ஆண்டு முதல் களத்தில் இருக்கிறோம். இதுவரை இருந்த அரசு முறையை மாற்றி சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற கனவோடு வந்துள்ளோம். எங்கள் கனவை கருத்தாகவும், காட்சியாகவும் உங்களிடம் கொண்டு செல்கிறோம். எவ்வாறு சிறந்த ஆட்சியை கொடுப்போம் என்பதை உங்கள் கண் முன் குறும்படம் மூலம் காட்சிப்படுத்துகிறோம்.

தமிழகத்தில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின் விநியோகம், சாலை என அனைத்தும் தனியாா்மயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், மதுக் கடையை அரசு நடத்துகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இவா்களின் குடும்பத்தினரை பாா்க்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவில்லை. கரூா் சம்பவத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை தவெக தலைவா் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், கரூருக்கு தமிழக முதல்வா் சென்றாா். இது என்ன நிலைப்பாடு என்று தெரியவில்லை. அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் செய்வோரால் 60 ஆண்டுகாலமாக மதுவை ஒழிக்க முடியவில்லை.

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும். தமிழக மக்கள் பொழுதுபோக்கு தளத்தில் அரசியல் தலைவா்களை தேடக் கூடாது. போராட்ட களத்தில் உள்ளவா்களைத்தான் தேட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.