மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என்று பாஜக மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

News image

குஷ்பு

Updated On :4 ஏப்ரல் 2026, 4:54 pm IST

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என்று பாஜக மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டியில், எனது கணவரான சுந்தர்.சி எனது அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர். அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் களத்தில் போட்டி இருக்க வேண்டியது அவசியம். வெற்றி சுலபமாக கிடைத்தால் அதனை ரசிக்க முடியாது.

மக்கள் நல்லது செய்பவர்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். பாரம்பரிய அரசியல்வாதி என்பதற்காகவும், குடும்ப அரசியல்வாதி என்பதற்காகவும் மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. அண்ணாமலை போட்டியிடாதது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது, அது மேலிட உத்தரவு, அதுகுறித்து அவர்தான் பேசவேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் திமுக இடையில்தான் போட்டி. தம்பி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவர் குறித்து மே 4 தேதிக்கு பிறகு பேசலாம். அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன். மத்திய தொகுதியில் நிறைவேற்றாத திட்டங்கள் பிரசனைகள் நிறைய உள்ளன. அனைத்திற்கும் தீர்வு காண்போம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.