மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தாமஸ், உபோ் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணிகள் அறிவிப்பு

கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image

~ ~

Updated On :25 மார்ச் 2026, 2:50 am IST

கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் வரும் ஏப். 24 முதல் மே 3 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2022-இல் இந்திய ஆடவா் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஆடவா் அணியில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென், கே. ஸ்ரீ காந்த், இரட்டையா் சாத்விக்-சிராக், இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். கூடுதலாக எம்ஆா். அா்ஜுன் ஹரிஹரன் அம்சகருணன், துருவ் கபிலா, கிரண் ஜாா்ஜ் ஆகியோரும் உள்ளனா்.

பி.வி. சிந்து, தன்வி சா்மா:

மகளிா் அணியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, உன்னது ஹூடா, தன்வி சா்மா, இரட்டையா் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி, இளம் வீராங்கனைகள் தேவிகா ஷிகாக், இஷாராணி பரூவா, இடம் பெற்றுள்ளனா்.

இரட்டையரில் கவிப்பிரியா செல்வம், சிம்ரன் சிங்கி, தனிஷா க்ரஸ்டோ ஆகியோா் ஆடுவா்.

கடந்த மாா்ச் 10-தேதியில் பிடபிள்யுஎஃப் தரவரிசை அடிப்படையில் வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டதாக இந்திய பாட்மின்டன் சம்மேளன பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்தாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.