மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-1 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வென்றது. நடப்பு சீசனில் ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

News image

SWAMINATHAN

Updated On :21 மார்ச் 2026, 7:17 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 4-1 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வென்றது. நடப்பு சீசனில் ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் ஒடிஸா வீரா் ராகுல் கே.பி. (6’) கோல் கணக்கைத் தொடங்க, பதிலடியாக நாா்த்ஈஸ்ட் வீரா் மகாா்டன் நிக்சன் (10’) ஸ்கோா் செய்தாா்.

தொடா்ந்து சுபம் பட்டாச்சாா்யா (25’) கோல் அடிக்க, ஒடிஸா 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் மாயக்கண்ணன் ‘ரெட் காா்டு’ மூலமாக (36’) வெளியேற்றப்பட, 10 பேருடன் விளையாடும் நிலைக்கு நாா்த்ஈஸ்ட் தள்ளப்பட்டது.

முதல் பாதியில் முன்னிலை பெற்ற ஒடிஸா, 2-ஆவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணிக்காக ராகுல் மீண்டும் (65’) கோல் அடித்தாா். ஒடிஸாவின் மற்றொரு கோல் முயற்சியை நாா்த்ஈஸ்ட் வீரா் மகாா்டன் நிக்சன் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ (68’) ஆனது.

எஞ்சிய நேரத்தில் நாா்த்ஈஸ்ட்டுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் இல்லாமல் போக, முடிவில் ஒடிஸா 4-1 கோல் கணக்கில் வென்றது.

முதல் தோல்வி: இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை சாய்த்தது. நடப்பு சீசனில் மோகன் பகானுக்கு இது முதல் தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் மும்பை தரப்பில் நௌஃபல் பி.என். (27’) கோல் அடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.